தாங்கள் கொடுக்கும் ஜாதகத்திற்கு பலன் கூறுதல்

ramar jathagam - horoscope Prediction

ஒரு மானுட கர்மாவிற்கு, அதன் கர்ம வினைப்படி நிகழும் பலாபலன்கள் பன்னிரு இராசிகளில் நிற்கும் கிரகங்களின் நிலையை பொறுத்தே அமைகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை இந்த கிரகங்களே எந்த ஒரு நிகழ்வையும் தீர்மானிக்கின்றன.

முக்கியமாக ஜெனன இயல்பு, கல்வி, வேலை வாய்ப்பு, தொழில், திருமணம், புத்திர பாக்யம், ஆரோக்கியம், பொருளாதார நிலை, குடும்பத்தாரின் நிலை, சுகம், சந்தோஷம், துக்கம், வெளிநாட்டு வேலை, வாகனம், சொத்து, உடன் பிறந்தோர், தாய், தகப்பன், மூதாதையர்கள், பூர்வீகம், குலதெய்வத்தின் அருள், குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம், பூர்வீகச்சொத்து என அனைத்திற்கும் பன்னிரு பாவகங்களையும், அதில் நிற்கும் கிரகங்களின் நிலை வைத்து பலன்கள் தெளிவாக கூறப்படும்.


ஒருவருடைய ஜாதகம் மிக துல்லியமாக கணிக்கப்பட்டிருப்பின் அந்த ஜாதகருக்கு கொடுக்கும் பலன்கள் மிகச் சரியானதாக இருக்கும்.

 

 

 

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

maneesmdu63@gmail.com

புதியதாக ஜாதகம் எழுதி பலன் கூறுதல்

விண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் கோள்கள் பூமியில் வசிக்கும் உயிரினங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை எடுத்துக் கூறுவதே ஜோதிட சாஸ்திரமாகும்.

ஜோதி என்றால் ஒளி என்று பொருள். ஒளிரும் முதன்மைக் கோளான சூரியனிடமிருந்தும், நட்சத்திரங்களிடமிருந்தும் வெளிப்படும் ஒளி அலைகள் பிற கோள்கள் மீது பட்டு பிரதிபலிக்கும் பொழுது அந்த கோள்களின் தன்மைகளையும் கலந்து பிரதிபலிகின்றன. அந்த ஒளி அலைகள் பூமியில் வசிக்கும் உயிரினங்களிடம் ஏற்படுத்தும் மாற்றங்களை அறிந்து கொள்ள வானியல் கலையான ஜோதிடக்கலை நமக்கு உதவுகின்றது.

ஒரு குழந்தை பிறக்கும் நேரம் மற்றும் இடத்தை அடிப்படையாகக் கொண்டே ஜெனன ஜாதகம் கணிக்கப்படுகின்றது.

வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளுக்கும் அந்த நாட்டின் நேரப்படியும் அந்நாட்டில் அந்த நேரத்தில் உள்ள கிரக அமைப்பின்படி ஜாதகம் கணித்து கொடுக்கப்படும். இருளில் நிற்பவர்களுக்கு ஒளிகாட்டும் கலையாக ஜோதிடக்கலை விளங்குகின்றது.

கீழ்கண்ட விவரங்களை தெளிவாக அனுப்பவும்.

  1. குழந்தை பிறந்த தேதி , நேரம் (பகல் /இரவு).
  2. பிறந்த ஊர்.
  3. தாய் தகப்பன் பெயர் ஊர்.

maneesmdu63@gmail.com

வீடு சொத்து வாகனம்

அனைவருக்கும் சொந்த வீடு, சொகுசு கார், சொத்து, ஆபரணங்கள் வாங்கி வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுவார்கள்.

இப்படி எல்லோர்க்கும் அமைவது கஷ்டம், பணம் அளவுக்கு அதிகமாக வைத்திருப்பார் ஆனால் அவரால் சொந்த வீடு வாங்கி வசிக்க மாட்டார். சொந்த கார் வைத்திருப்பார் ஆனால் அவர் அந்த வாகனத்தில் சென்று சுகப்பட மாட்டார். இப்படி ஓவ்வொருவருக்கும் ஓவ்வொரு அமைப்பு உண்டு. ஓரு சிலர் அதிகப்படியான வீடு கட்டி வாடகைக்கு விட்டிருப்பார்.

வீடு கட்டும் யோகம் நன்றாக இருந்து வாஸ்து அமைப்பின்படி வீடு கட்டி வாழ்பவர்கள் சகல ஐஸ்வர்யங்களும் பெற்று சுகமாக வாழ்கிறார்கள்.
வாஸ்து குறைபாடு உள்ள வீட்டில் வசிப்பவர்கள் மன அமைதி பாதிக்கப்பட்டு, பொருளாதார சீர்கேட்டுக்கு ஆளாகி, நோய் தாக்குதல், விபத்து போன்றவற்றிற்கு ஆளாகி சிரமப்படுகிறார்கள். வாஸ்து குறைபாட்டை சரி செய்தால் சுகமாக வாழலாம்.

ஜெனன ஜாதக அமைப்பின்படி எந்த நேரம் வீடு, வாகனம், சொத்து வாங்கும் யோகம் இருக்கிறது, தடைகள் இருந்தால் தடைகள் அகல எளிய பரிகாரங்கள் மூலம் தடைகள் நீங்க வழி கூறப்படும்.

பாதியில் கட்டி நின்ற வீட்டிற்கும் பரிகாரம் , வாஸ்து பார்த்து சரி செய்யலாம்.

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

maneesmdu63@gmail.com

கோர்ட் வழக்கு வெற்றி

எந்த ஓரு பிரச்சனையையும் பேசித் தீர்க்கலாம். பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை.

“மனமிருந்தால் மார்க்கம் உண்டு”

ஆனால் இன்று சிறிய பிரச்சனை என்றாலும் கௌரவத்திற்காக காவல்துறை, நீதிமன்றம், அடிதடி என்று சென்று விடுகிறார்கள். சொத்து பிரச்சனை, கொடுக்கல் வாங்கல் பிரச்சனை, குடும்பப் பிரச்சனை, இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகள் மூலம் நிறைய பேர் வழக்குகளில் மாட்டிக் கொண்டு மன அமைதியையும், பொருளாதாரத்தையும் இழக்கின்றார்கள்.

அவரவர் ஜெனன ஜாதகத்தின் மூலமும், பிரசன்னத்தின் மூலமும், வழக்கு வெற்றி பெறுமா என்பதனையும், வெற்றி பெற உண்டான எளிய பரிகார வழிகளையும் கூறுகின்றோம்.

 

 

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

maneesmdu63@gmail.com

கடன், எதிரி,நோய் பிரச்சனைக்கு தீர்வு

இன்றைய கால கட்டத்தில் ஏதாவது ஓரு வழியில் பெரும்பாலனோர் கடன் பெற்று விடுகிறார்கள்.
சிலர் தகுதிக்கு மீறி கடன் பெற்று வட்டி மேல் வட்டி கட்டி மீளமுடியாமல் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கின்றார்கள். சிலர் குடும்பம் நடத்தவே கடன் வாங்கி கஷ்டப்படுகிறார்கள். கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் – இலங்கை வேந்தன் -என கம்பர் இராமயணத்தில் உவமையாக கூறியிருக்கிறார்.

ஓருவர் எப்போதும் கடனாளியாக இருப்பது இல்லை, சூழ்நிலை கடனாளியாக்கி விடுகின்றது. ஓரு சிலர் வசதி இருந்தாலும் ஏதாவது கடன் வாங்கியிருப்பார்கள். அவரவர் ஜெனன ஜாதகத்தில் கடன் பற்றிய பிரச்சனையும், தீர்வும் ஆய்வு செய்து பலன் கொடுக்கப்படும்.

மேலும் எதிரிகள் தரும் தொல்லையால் பலர் மன அமைதியிழந்து இருப்பார்கள், இவர்களுக்கும் ஜெனன ஜாதகத்தினை ஆய்வு செய்து பரிகாரம் தீர்வு கூறப்படும். ஜெனன ஜாதகத்தின் அடிப்படையிலும், கோட்சார கிரகங்களின் சஞ்சாரத்தினாலும் ஏற்படும் ஓரு சில நோய்களை கண்டறிந்து அதற்கான எளிய முறையில்  பரிகாரத் தீர்வு கூறப்படும்.

 

 

 

 

 

 

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

maneesmdu63@gmail.com

புத்திர பாக்கியம் தடை ,தாமதம்

குழலினிது யாழினிது என்பர் – மக்கள்தம்
மழலைச் சொல் கேளாதவர்

புத்திரம் இல்லாதவன் “புத்” என்ற நரகத்தில் விழுவான் என்பது தர்ம சாஸ்திரம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் பலர் உள்ளனர். குழந்தை பெற்றால் தான் ஓரு பெண் முழுமையடைகிறாள். தன் வம்சம் தளைக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதருடைய ஆசையும் ஆர்வமுமாக இருக்கும்.
இருப்பினும் பல்வேறு காரணங்களால் பல தம்பதியினருக்கு புத்திர பாக்யம் கிட்டுவதில்லை. புத்திர சந்தானம், புத்திர பாக்யம், புத்திர பேறு, புத்திர பிராப்தி போன்ற வம்ச வாரிசுக்குண்டான ஆண் சந்ததி பற்றி ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அளவு கடந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
எந்த ஜாதகத்திலும் “ பூர்வ புண்ணிய பலன்” நன்றாக இருக்க வேண்டும். இந்த பூர்வ புண்ணிய பலன் இருந்தால் தான் புத்திர பலன் இருக்கும்.

ஓரு சிலருக்கு காலாகாலத்தில் புத்திர பேறு ஏற்பட்டு விடுகிறது. சிலருக்கு காலங்கடந்து ஏற்படுகிறது. சிலருக்கும் புத்திர பேறு இல்லை.

தங்களின் ஜெனன ஜாதகம் கொண்டு இவற்றினை அறிந்து பரிகாரம் தேவைப்பட்டால் கூறப்படும்.

பரிகாரம் தேவைப்பட்டால் எளிய முறையில் தாங்களே கோவில்களுக்குச் சென்று பரிகாரம் செய்து கொள்ளுமாறு கூறப்படும்.

தத்துபுத்திரன்

ஜாதக அமைப்புபடி புத்திர பாக்கியம் இல்லாத நபருக்கு தத்துபுத்திரத்திற்கான அமைப்பு உள்ளதா என்பதனை தங்களின் ஜெனன ஜாதகம் மற்றும் பிரசன்னம் மூலம் பார்த்து கூறப்படும்.

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • கணவன்  , மனைவி இருவர் ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் தெளிவாக அனுப்பவும்.
  • திருமணம் ஆன தேதி, நேரம், ஊர் இவைகளை அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லையென்றால் போனில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டுக்கொள்ளவும்.

maneesmdu63@gmail.com

காதல் வெற்றி

காதல், காதல் திருமணம் என்பது இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதரணமான விஷயம் ஆகி விட்டது. காதலில் வெற்றி பெற்று திருமணமாகி சந்தோஷமாக வாழ்க்கை நடத்துபவர்கள் பலர், அதே போல் காதல் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் சிலர், காதல் தோல்வியாகி திருமணமே வேண்டாம் என்று இருப்பவர் சிலர் இப்படி பலதரப்பட்டவர்கள் உள்ளனர்.

 

காதல் வெற்றியாகுமா, திருமணம் நடக்குமா அல்லது எதிர்ப்பு வருமா, யாரால் எதிர்ப்பு வரும் என்பதனையும், பலருக்கு இன்றைய காலகட்டத்தில் தாய், தகப்பனே முன்னின்று காதல் திருமணம் செய்து வைக்கின்றார்கள். இந்த யோகம் யாருக்கு அமையும் என்பதனையும், பரிகாரம் தேவைப்பட்டால் எளிய முறை பரிகாரமும் ஜெனன ஜாதக அமைப்பின்படி ஆய்வு செய்து கூறப்படும்.

 

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

maneesmdu63@gmail.com

கணவன் மனைவி பிரச்சனை மற்றும் விவாகரத்து

ஓவ்வொருவருக்கும் பிறவி அமைப்பு என்று ஓன்று உண்டு. அதனை அவரவர் ஜெனன ஜாதகத்தின் மூலம் அறியலாம். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத நபர்களே இல்லை. ஆனால் ஓவ்வொருவருக்கும் தீர்க்க முடிந்த பிரச்சனை, தீர்க்க முடியாத பிரச்சனை என்று உண்டு. எந்த ஓரு பிரச்சனையையும் பேசித் தீர்க்கலாம். பேசித் தீர்க்க முடியாத பிரச்சனை என்று இல்லை.
கணவன் மனைவியிடையே உள்ள பிரச்சனை, விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லாத நபர்கள் கோர்ட், வழக்கு விவாகரத்து என்று போகிறார்கள். அனைத்திற்கும் கிரக நிலைகள் தான் தீர்மானிக்கும். அவரவர் ஜெனன ஜாதகத்தில் ஆய்வு செய்து பிரச்சனை தீர்ந்து சுமூகமாக இருப்பார்களா, விவாகரத்து ஆகுமா அல்லது இதற்கு எளிய பரிகாரம் உண்டா என்று ஆய்வு செய்து தங்களுக்கு வழிகள் கூறப்படும்.

 

 

 

 

 

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  1. கணவன்  , மனைவி இருவர் ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் தெளிவாக அனுப்பவும்.
  2. திருமணம் ஆன தேதி, நேரம், ஊர் இவைகளை அனுப்பவும்.
  3. ஜாதகம் இல்லையென்றால் போனில் தொடர்பு கொண்டு விபரம் கேட்டுக்கொள்ளவும்.

maneesmdu63@gmail.com

2 ஆவது திருமணம்

Astrology for second marriageமுதல் திருமணம் விரைவில் பருவ வயதில் நடந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், கோட்ச்சார கிரக சஞ்சாரங்களாலும், ஜெனன ஜாதக அமைப்பின் படியும் முதல் களத்திரத்தை இழந்திருப்பார்கள், அவர்கள் மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு பைத்தியம் பிடிக்காத குறையாக வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

இப்பேற்பட்ட நபர்களுக்கு 2-வது திருமணம் நடக்குமா, நன்றாக வாழ்க்கை அமையுமா என்பதனை அவரவர் ஜெனன ஜாதகத்தின் மூலம் ஆய்வு செய்து அவர்களின் வாழ்க்கை ஓளிவீசச் செய்யும் பரிகாரங்களையும் கூறி அதற்கான பலன்களையும் தருகின்றோம்.

 

 

 

 

 

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

maneesmdu63@gmail.com

திருமணம் தடை, தாமதம் பரிகாரம்

திருமணம் தடை, தாமதம்ஒவ்வொரு ஆணும், பெண்ணும் பருவ வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகள் பெற்று, தாம்பதியம் என்னும் சம்சார சாகரத்தில் மூழ்கி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைபடுவார்கள்.

ஆனால் ஒரு சிலருக்கு பருவ வயதையும் தாண்டி ஆணுக்கு 30 வயது தாண்டியும், பெண்ணுக்கு 25 வயது தாண்டியும் திருமணம் ஆகாமல் மனதளவில் பாதிப்படைந்தும் இருப்பார்கள்.

இவர்களின் பெற்றோர்கள் அதைவிட மனக்கவலையில் என்ன பாவம் செய்தோம் நம் முன்னோர்கள் என்ன பாவம் செய்தார்கள், நம் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள், ஏன் இப்படி நம் பிள்ளைகளுக்கு திருமணம் தாமதமாகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக இருப்பார்கள்.

இது போன்ற திருமணம் தடை தாமதத்திற்கு என்ன காரணம் என்று அவர்களின் ஜெனன ஜாதகத்தின் மூலம் ஆய்வு செய்து என்ன தோஷங்கள் உள்ளன என்றும் அதற்கு என்ன எளிய முறை பரிகாரம் என்றும் கூறப்படும்.

பரிகாரங்கள் தாங்களே கோவில்களுக்கு நேரில் சென்று எளிய முறையில் செய்யும்படி கூறப்படும்.

இதனை முழுமனதுடன் செய்த நபர்கள் விரைவில் திருமணம் செய்து சந்தோஷமாக இருக்கின்றார்கள்.

 

கீழ்கண்ட விவரங்களை மெயில் மூலம் தெளிவாக அனுப்பவும்.

  • ஜாதகத்தின் அனைத்து பக்கங்களையும் ஸ்கேன் செய்து தெளிவாக அனுப்பவும்.
  • ஜாதகம் இல்லாதவர்கள் சரியான பிறந்ததேதி, நேரம்( பகல் /இரவு ),ஊர் அனுப்பி மற்ற விவரங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்.
  • பிறந்ததேதி தெரியாதவர்கள் போனில் தொடர்பு கொண்டு கேட்டு கொள்ளவும்

maneesmdu63@gmail.com